எவை எவை எது வரை?
அன்பு என்பது எதுவரை?
துன்பம் விளைந்து நலியும் வரை!
பண்பு என்பது எதுவரை?
உண்மை குணம் வெளியில் வரும்வரை!
ஆசை என்பது எதுவரை?
மோசம் போகும் உணர்வு தெரியும் வரை!
காதல் என்பது எதுவரை?
கசப்பினில் மூழ்கி மறையும் வரை!
உறவு என்பது எதுவரை?
உற்றவர் உரியதை வினைக்கும் வரை!
வாழ்வு என்பது எதுவரை?
வறுமை நம்மைத் தொடா வரை!
உயர்வு என்பது எதுவரை?
பெயர்வும் தாழ்வும் நிகழும்வரை!
சண்டையென்பது எதுவரை?
மண்டையில் தவறு இடிக்கும் வரை!
வளர்ச்சி என்பது எதுவரை?
தளர்ச்சி மனதில் முளைக்கும் வரை!
அமைதி என்பது எதுவரை?
கெடுதி எவருக்கும் செய்யா வரை!
வீழ்ச்சி என்பது எதுவரை?
எதிர் நீச்சல் துவங்கும் வினாடி வரை!
அவ்வைமகள் (Dr Renuka Rajasekaran)
Sunday, July 24, 2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment