நதிநீரின்பரிசல்போல் போகின்றேன் என்
பதிதீரன் கரம்பற்றிக் காலம் வெல்ல!!
இதோ பயணித்துக்கொண்டிருக்கிறேன்!
எதற்காக? எதை நோக்கி? யாரைத்தேடி?
அதிவிரைவாய் நகர்ந்துவிட்டிருக்கிறேன்
ஆதி இருப்பிடம் அதோ வெகுதொலைவில்
சூதொன்றும் அறியவில்லை தெரியவுமில்லை நல்ல
சுதையொத்த வெண்மைநிலையென் பேதை நெஞ்சம்
சீதைக்கொரு ராமனைப்போல் வடித்துவிட்டேன் என்
சிதை மாயும் இறுதிவரை இணைந்து நிற்பேன்
வாதில் ஆவலுடன் அவனிடம் என்சரிதை சொல்வேன்
காதில் இன்னபிறரகசியங்கள் மெல்லச்சொல்வேன்
தாதியாத்துணையெழுந்து தாயாய்த்தாங்கி நிற்பேன்
பாதியாய்க்கலந்து நின்றவன் நிழலாய்ப்பரவிடுவேன்
தீதென்று சொல்பவரை எதிர்த்திடுவேன் என்னைப்
பீதியுறவைப்பவரைச் சாபமுறவைப்பேன்!
நதிநீரின் பரிசல்போல் போகின்றேன் என்
பதிதீரன் கரம்பற்றிக் காலம் வெல்ல!!
அவ்வைமகள் (Dr Renuka Rajasekaran)
0 comments:
Post a Comment