Subscribe:

Pages

Saturday, February 26, 2011

உலகு வியக்கும் தமிழன்: கே.ஆர். ஸ்ரீதர்



உலகு வியக்கும் தமிழன்: கே.ஆர். ஸ்ரீதர்

உலகிற்கு என்ன தேவை என்பதனை  மிகச்சரியாக உணர்ந்து, அதனை  மிகச்சரியான  தருணத்தில்,  மிகச்சரியான அளவிலே தருகிறவர்கள் உலகில் வாழும் கடவுள்களாகிறாகள்இவ்வரிசையில், இன்று உலகமே இவரை அண்ணாந்து பார்க்கிறது. இவர் தருகிற வரத்திலே தான், இப்புவியில் எதிர்வரும் காலங்களில் நாம் எதிர் நோக்கக்கூடிய பல்வேறு  பிரச்சினைகளுக்குத் தீர்வு காணமுடியும் என்கிற நம்பிக்கை அனைவரது மனத்திலேயும் உருவாகியுள்ளது.

மனித நடவடிக்கைகளால் சுற்றுச்சூழல் சீர்கேடு அடைந்து  விட்டது  — உலகம் அழியப்போகிறது  என்று பலபேரும்  நெகடிவாக எண்ணிக்கொண்டிருக்கும் வேளையிலே,  இவ்வுலகத்திற்கு  அழிவே இல்லை; நாம் சர்வ சௌக்கியமாக வாழமுடியும் என்று உறுதியாகக்கூறும் இந்த மனிதர்  புவியில் மட்டுமல்ல வேறு எந்தக் கோளிலும்  நாம் வசதியாக வாழமுடியும்  என்று தைரியமாகக் கூறுகிறார்.    உலகுக்காக இவர் உருவாக்கியிருப்பது  எரிபொருள் பெட்டிகள், இவற்றால் மின்சாரம் பெறலாம். அதுவும் சுற்றுச்சூழல் கேடு இல்லாத தூய்மையான மின்சாரம்.

தமிழனென்று சொல்லடா! தலைநிமிர்ந்து நில்லடா!! என்று நம்மை  எழுச்சியுறச்செய்யும் ஸ்ரீதர், திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் இளம் பொறியியல் முடித்துவிட்டு, அமெரிக்காவிற்கு வந்தவரஇலினாயிஸ் பல்கலைக் கழகத்தில், முதுநிலைப் பட்டமும் முனைவர் பட்டமும் பெற்றுவிட்டு அரிசானா  பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக, நாசாவின் நிதி உதவியுடன்   செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்க்கையை நிலைநிறுத்துவதற்கான திட்டப்பணிகளைச் செய்தவர்.

என் கடன் பணிசெய்துகிடப்பதே  எனும்   பிரபல வாசகம்  இவருக்காகவே  பிறந்தது எனலாம்.
உழைப்பு என்றால் இப்படி அப்படி என்றிராமல் இவர் கொடுத்திருக்கிற உழைப்பு  மண்ணில் இவர் போல் உழைத்தவரில்லை எனும் படியானது.   ஊழையும் உப்பக்கம் காண்பர் என்று வள்ளுவன் சொன்னானே அதன்பொருள் என்னவென்பதனை  ஸ்ரீதரிடம் காணமுடியும்ஒற்றை மனிதனாக எழுந்து, விடாப்பிடி உழைப்பினால் மட்டுமே இன்று உலகு முழுவதிலும்பேட்டன்ட்” வாங்கி, ஜாம்பவான்கள் என்று  சொல்லக்கூடிய கூகிள், ஈபே, வால்மார்ட், பெடெக்ஸ், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம், உள்ளிட்ட நிறுவனங்களுக்கு, தான் உருவாகியுள்ள தொழில்நுட்பத்தால் மின்வசதி வழங்கி  உலகில் ஒரு மாபெரும் ஆக்கப்புரட்சியை  அமைதியாக நிகழ்த்திக் காட்டியுள்ளார்  ஸ்ரீதர்.
சவால்கள் நிறைந்த துறையில், குறைகூறவும் தூற்றவும் பலரும் இருக்கின்ற சூழலில், தனது விவேகத்தையும்  தன்னம்பிக்கையையும் மட்டுமே ஆயுதமாகக் கொண்டு இம்மனிதர் உறுதியாக முன்னேறி வந்திருக்கிறார். வேறு எவரேனும்  இருந்திருந்தால்  இந்நேரம் காணமல் போயிருப்பார்கள்

சோதனைகளையும் வேதனைகளையும் சாதனைகளாக மாற்றிக்காட்டியிருக்கிற ஸ்ரீதரை  இவ்வுலகின் ஒளிவிளக்கு எனலாம்ப்ளூம் என்றால் மலர்ச்சிவளர்ச்சி, ஸ்ரீதரது நிறுவனத்தின் பெயர்  ப்ளூம் எனர்ஜி. பெயருக்கேற்றார்போல் இந்நிறுவனம்  வளர்க வளர்க என வாழ்த்துவோம்.




Saturday, February 12, 2011

தமிழ் வழக்கு மொழி உங்களுக்குத் தெரியுமா?: மூன்று "சு" சிறப்புகள்?

தமிழ் வழக்கு மொழி 
உங்களுக்குத் தெரியுமா?: மூன்று "சு" சிறப்புகள்?


சுக்குக்கு மிஞ்சின வைத்தியம் இல்லை
சுத்தியலுக்கு மிஞ்சின ஆயுதம் இல்லை
சுப்பிரமணியனுக்கு மிஞ்சின தெய்வம் இல்லை

ஏலாதி கூறும் அன்புடையோர் கொள்ளும் ஆறு குணங்கள்


ஏலாதி கூறும் அன்புடையோர் கொள்ளும் ஆறு குணங்கள்

ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு என்ற பிரபலத் திரைப்படப்  பாடலை நாமறிவோம்.     
இந்தப் பாடல் போன்றே சுவையும் எளிமையும் நிறைந்த ஏலாதிப்ப்பாடல் ஒன்று உண்டு. இதோ பாருங்கள்!!

சாதல் பொருள் கொடுத்தல் இன்சொல் புணர்வுவத்தல்
நோதல் பிரிவில் கவறலே -- ஓதலின்
அன்புடையார்க்(கு) உள்ளன ஆறு குணமாக
மென்புடையார் வைத்தார் விரித்து  

ஒருவர் பால் அன்பு மிகக் கொண்டு நட்புடன் வாழ்பர்கள் ஆறு குணங்களைத் தன்னகத்தே கொண்டவராக இருப்பார் என்று சான்றோர் விரித்துரைத்திருப்பதாகக் கணிமேதையார் கூறுகிறார். கேளுங்கள்!!

நண்பர் உயிர்துறந்த காலை தானும் உயிர் துறத்தல்*; நண்பருக்கு வறுமை வந்தகாலை பொருள் தருதல், நண்பர் துன்புறுங்காலை, ஊக்கச் சொற்களைப் பேசி தைரியம் கூறுதல், இயலும் வகையிலெல்லாம் நண்பருடன் கூடிப்பேசி மகிழ்தல், நண்பரின் துயரத்தில் பங்கு கொள்ளுதல், பிரிவு ஏற்படுங்காலை உள்ளம கலங்குதல் ஆகியன.

*சோழ மன்னர்  கோப்பெருஞ்சோழரும், பாண்டிய அரசவைப் புலவரான பிசிராந்தையாரும் ஒருவரை ஒருவர் காணாமலேயே அன்பும் நட்பும் கொண்டிருந்தனர் எனவும், பிசிராந்தையார் இறந்துவிட, கோப்பெருஞ்சோழர் வடதிசை நோக்கித் தவமிருந்து உறுத்து உயிர் துறந்தார்    எனத் தமிழ் இலக்கியம் சான்று காட்டுகிறது.   

செரியாமைப் பிணிக்கும் ஏலாதி ! அறியாமைப் பிணிக்கும் ஏலாதி !!

செரியாமைப் பிணிக்கும் ஏலாதி ! அறியாமைப் பிணிக்கும் ஏலாதி !!

பதினெண்கீழ்க் கணக்கு நூலகளுள் ஒன்றான ஏலாதி எனும் நூல் அறநெறிக் கருத்துக்களைக் கூறுகிற நூலாகும். சோதிடத்தில் வல்லவராகக் கருதப்பட்ட கணிமேதாவியார் ஏலாதியை இயற்றிய ஆசிரியராகும். இவரது ஆசிரியர் மாக்காயனார்; கணிமேதாவியாரோடு உடன் பயின்ற இன்னுமொரு தமிழ்ப் புலவர் சிறுபஞ்ச மூலத்தை இயற்றிய காரியாசனாகும்,  கடைச் சங்ககாலத்திற்குப் பிற்பட்டவராகக் கொள்ளப்படும் கணிமேதாவியார், திணைமாலை நூற்றைம்பது எனும் நூலையும் இயற்றியுள்ளார்.
ஏலாதி எனும் பெயர் ஒரு காரணப்பெயராகும்: உடலில் ஏற்படும் செரியாமைப் பிணியைப் போக்கவல்லது ஏலாதி* எனும் மருந்துப் பொருள்; அதுபோன்றே மக்களின் மனதிலே ஏற்படுகிற அறியாமைப் பிணியைப் போகவல்லது ஏலாதி எனும் நூல். இந்நூல கூறும் அறிவுரையானது  வறட்சிக் கடுமையில்லாமல் தமிழ்ச்சுவையோடும் ஒலிநயத்தொடும்  அமையப்பெற்றுள்ளதால், நவீனயுகமாகிய இன்றைய காலகட்டத்திலும் இப்பாக்களைக் கொண்டு பழகு பாங்கியல், ஆளுமைத்திறன், உணர்வாளல், ஆகிய மனிதவளக் கலைகளை, நம் குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் வழங்கலாம்.          
எடுத்துக்காட்டாக ஒரு பாடல்: அரிது எது எளிது எது எனக் கணிமேதாவியார் கூறுவதைப் பாருங்கள்
பாடல்
சாவது எளிது அரிது சான்றாண்மை நல்லது
மேவல் எளிது அரிது மெய்ப்போற்றல் -- ஆவதன்கண்
சேறல் எளிது நிலை அரிது தெள்ளியராய்
வேறல் எளிது அரிது சொல்.

பாடலின் பொருள்
  
இறந்து போவது என்பது எளிமையான செயல்; ஆனால் கற்றறிந்து, சான்றாண்மை கொள்வது கடினமான செயல். வாழ்க்கையை எப்படியோ வாழ்தல் எளிது;  ஆனால் உண்மையைப் போற்றி வாழ்தல் அரிது; துறவறம் பூணுதல் எளியது; ஆனால் துறவற நிலையில்  நிற்றல் அரியது. சொல்லுதல் எளியது; ஆனால் சொல்லிய  ஒன்றைத் தெளிவாகச் செய்து வெற்றி பெறுதல் அரிது.     

பிற்குறிப்பு
*ஏலம் துவங்கி, இலவங்கம், சிறுநாவற்பூ, சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய ஆறு மருந்துப்பொருட்கள் ஏலாதியில் அடக்கம்.

அவ்வைமகள்
  

நானும் பட்டிமன்ற ராஜாவும்

நானும் பட்டிமன்ற ராஜாவும்

பிப்ரவரி ஆறாம் நாள் அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் களைகட்டி கவினுறு வனப்புடன் கலகலப்பும், சிரிப்புமாய்க் காணப்பட்டது. காரணம் - பட்டிமன்ற ராஜாவின் வருகை. சங்கத்தின் பொங்கல் விழாக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்காக, இங்கு வந்திருந்த ராஜா நடுவராக இருந்து நடத்திய பட்டிமன்றம்  வெகு விறுவிறுப்பாக நிகழ்ந்தேறியது.
                                       இடமிருந்து வலமாக: திருமதி ஜெயா மாறன்,                                                      திருமதி ஜெயா, திரு ராஜா, நான், திருமதி லஷ்மி தேசம் 
வாழ்க்கைக்கு உறுதுணையாக இருப்பது உறவுகளா நட்பா என்பது பட்டிமன்ற  விவாதத்தின் தலைப்பு. தலைப்புக்குத் தலா மூன்று பேர் என நாங்கள் “பிளந்து கட்டினோம்.” தனக்கே உரித்தான தனித்துவப்பாணியில், பட்டிமன்றத்தை வளர்த்து வழங்கினார் திரு ராஜா அவர்கள்.

நட்பு தான் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருப்பது என்பது என் கட்சி, திருமதி லஷ்மி தேசம், திரு ஸ்ரீராம் சுப்பிரமணியன் மாறும் நானும் பேச, எதிரணியில் உறவுகள் தாம் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருப்பவை என திரு பிரதீப் திருமலை, திருமதி, சுரேகா பாலாஜி, மற்றும் திரு ராஜா வேணுகோபால் ஆகியோர் பேச நகையும் சுவையுமாக பட்டிமன்றம் விளைந்து சிறந்தது. 
  
பட்டிமன்றம் தொடங்குவதற்கு முன்னால் எனது அருகில் வந்து ராஜா அமர்ந்து கொண்ட காரணத்தினால், கொஞ்சம் அளவளாவும் வாய்ப்பு கிடைத்தது. தாங்க முடியாத முடியாத குளிர் உடுப்புமேல் உடுப்பாகப் போட்டுக்கொண்டுக் காலம் தள்ளுகிறேன் என்றார். “உடம்பில் கொஞ்சமாவது கொழுப்பு இருக்கவேண்டுமே” என்றேன். “இனிமேல எங்க இதையெல்லாம் புதுசா வளத்துக்கறது” எனது அறிவியல் ஆலோசனைக்கு ஒரு யதார்த்த பதிலடியாய்க் காமடி!!.         

பேசவும், பழகவும் இனியவராய் நேசச் சிறகுகள் விரித்துப் பறந்து வந்து எம்முடன் நட்பு பாராட்டிச் சென்றிருக்கிற ராஜா அவர்கள், இறுக்கமும், இன்னலுமாகச் சென்று கொண்டிருக்கிற இன்றைய வாழ்க்கையில், பற்றாக்குறையாய்ப் போய்க்கொண்டிருக்கிற சிரிப்பையும்  இறுக்கத் தளர்வையும், மக்கள் வாழ்வில் சேர்க்கும் ஒப்ப்பிலாப் பணியைச் செய்து வருகிறார். இப்பணி மென்மேலும் சிறக்க வாழ்த்திடுவோம்.          

       
    

"I Take the Blame" -- Mr Benton

February 13 is observed as "Blame Someone Else Day." Whatever be the origin of the day, we find that most people are doing this 24-7. Even those who claim themselves to be leaders are spontaneous to employ this technique at all opportune times.

Leading people especially at the darkest moments of life is  a herculean task. When such moments arrive, it is not uncommon to see a person at the helm of affairs saying, "that is not my job"  or "that is not expected of my job" and  he or she would wash the  hands off  the commitments. A step further, such individuals also would go on, looking for a scapegoat and to fleeing from responsibilities.

In this growing trend, we still have some individuals, who stand out distinct and brave; they are willlig to take up the challenging responsibilities without any sham or pretext.  Our Interim Principal, Mr Keith Benton is a living example of  bravery, trust, and dependablility as we sail through  fatal waters when our ship of resources has marooned in the dead sea. 

The darkest moment came on us when we got the news that our School District decided to close down our school ----  about 50 staff losing their jobs and the school is  being closed ever permanently denying the genuine services to the highly deserving students!! 

When everyone lost the hope, this man stood up tall and high and talked to all of us in a firm deep voice, and helped us gather our strength to fight the battle. The battle was not against any body or anything but against our ownselves, fearing the fear in the first place, and he cut through all the arguments, debates and doubts, to offer certain solutions every body could understand.
 
He transformed those moments of  misgiving into a golden opportunity to accomplish something unique. He showed to us that we had only one time available to us for making some changes in the existing arrangement. The changes he advocated were changes for the first time in the history of the school. Honestly speaking not many of our staff had the mental preparedness to  accept and effect these changes. While delineating these changes,  Mr Benton said:,"If this does not work, I take the blame." This was the most invigorating part of his speech.  Those who had lost their hopes thought, "Oh! I am not going to lose anything further!" and they started to mellow down from the frozen state to a thawed flow. Then on things went different way!!

With his  distinct ways of communication, dialogue, and  listening to others, he  stands with  us, laughs with us, thinks along with us and we are  not growing weaker day by day  as the  declared doomsday  is fast approaching us. We are conscious as we receive some rays of  inspiration from this beacon, Keith Benton.    

Through his words and deeds, Mr Benton has proved to us that leadership is not a position but a tremendous responsibility. He showed to us what ownership really means in an organization. When he himself had no typical contracted job, and when he cannot have a job in the School system for the next school year, he is all set to help us through the process,when he can easily wash us off his hands.

Bill Gates said, "As we look ahead into the next century, leaders will be those who empower others." True to this vision, Mr Benton is supporting  us,  gathering every bit of  hope we have and through his motherly affection he puts us together, and  he is there with us in this great struggle. His is a noble task of  amalgamating all our latent strength and bringing it outside to glow and shine, as we traverse through the dark tunnels of dispair, helplessness, and the reality of  future slipping away from our hands and hearts. 

Words cannot adequately express the understanding this gentleman is exhibiting toward us. Mr  Benton exemplifies what  Truman said," Men make history and not the other way around. In periods where there is no leadership, society stands still. Progress occurs when courageous, skillful leaders seize the opportunity to change things for the better."