மானிட ஜென்மத்தை நிலைத்து வைப்பேன்
மரணமில்லா நிலை சேர்த்து வைப்பேன்
மடிந்தும் பிடிப்பாவேன்
மண் சிலிர்க்கப் பயிராவேன்
கை விரித்து வேராவேன்
உயிர் மரித்தும் மரமாவேன்
முகம் முளைத்துக் கல்லாவேன்
தோளில் உரமாவேன்
கண்மூடிக் கருவாவேன் என்
குருதியில் பிரசிவிப்பேன்
அவ்வைமகள்
0 comments:
Post a Comment