Subscribe:

Pages

Thursday, April 7, 2011

அரிஸ்டாட்டில்: ஏன்? என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை

ஏன்? என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை 

வினாக்கள் - இவை எப்போது தோன்றின ஏன் தோன்றின எவ்வாறு தோன்றின என்று யாராலும் சொல்ல முடியாது. வினாக்கள்  எழுப்புவது மனிதர்களுக்கு மட்டுமே சாத்தியமானதா பிற விலங்குகளுக்கும் இது  சாத்தியமா என நம் சிந்தனையைக் கொஞ்சம் கிளரினோமேயானால், மூளை அமைப்பு உள்ள விலங்குகள் யாவற்றிறிகும் இந்தத்திறன்   அமையப்பெற்றிருக்கவேண்டும் என்றே தோன்றுகிறது. முதுகெலும்பு உள்ள விலங்குகளில் இது படிப்படியாக வளர்ச்சி பெற்று மனிதர்களாகிய நம்மிடத்திலே இது ஒரு உச்சஸ்தாயியில் இருக்கிறது என்கிற உருவாக்கமும் கிடைக்கிறது. . 

நமக்கு மொழி எனபது மிகப்பெரிய வரப்பிரசாதம், எனவே, விலங்குகளைப் போலல்லாமல்-  நாம் எண்ணுவதை நம்மால் அப்படியே சொல்லிவிடமுடிகிறது - எழுதமுடிகின்றது - பதிவுசெய்ய முடிகின்றது. 

வினாக்கள் பொதுவாக ஒற்றையாகப் பிறப்பதில்லை.  ஒருவினாவின் கரு முளைவிட்டதென்றால், அங்கே தொடர் சிருஷ்டியாக வேறு சிலவினாக்களும் பிறந்துவிடும்.   

இவ்வாறு ஒருவருக்கு வினாக்கள் தொகுதியாக வெளிப்படுகின்றதென்றால், அவர் சிந்தனை வளத்திலே, உயர்நிலைவகிப்பவர் என்று கொள்ளலாம்.


அரிஸ்டாட்டில் (கிமு 384 –322 )

இத்தகு உயர் சிந்தனையாளர் ஒருவரை நம் புவியரசி ஈன்றெடுத்தாள். அவர்தான் அரிஸ்டாட்டில்.  

நாம் எத்தனைக்  கேள்விகளைக் கேட்கமுடியும் என்றால், நமக்கு எத்தனைப்  பொருட்களைத் தெரியுமோ அத்தனைக் கேள்விகளை நாம் எழுப்பமுடியும் என்பது  அரிஸ்டாட்டிலின்  கூற்று.  இங்கு பொருட்கள் என்பதில் உயர்திணை மற்றும்  அக்றிணைப் பொருட்கள் யாவுமே  அடக்கமாகும்.

ஆனால் இவ்வினாக்கள் யாவற்றையும் நான்கே நான்கு வினாக்களுக்குள் அடக்கிவிடமுடியும்  என்பார்  அரிஸ்டாட்டில்.

 இதனை அவர் எத்தனை அழகாகக் கூறுகிறார் பாருங்கள்

ஒரு பொருள் உள்ளது என்று தெரிந்துவிட்டால், அதனது தன்மையை  நாம் வினவுகிறோம்,  அப்பொருள் இத்தன்மையது   என்று அறிந்துகொண்ட  பின் அதனது  விவரங்களை வினவுகிறோம். அடுத்து அது ஏன் அவ்வாறு உள்ளது என வினவுகிறோம்.
தனது போஸ்டீரியர் அனலிடிகா என்ற நூலில்  அரிஸ்டாட்டில் இவ்வாறு கூறியுள்ளார். இதோ பாருங்கள். 
Aristotle’s  schema of classification of questions.
No

Kind of Question

Categorial Label
1
Existence/Affirmation
When we ascertained the thing's existence
2
Essence/Definition
we inquire into its nature
3
Attribute/Description
when we know the fact
4
Cause/Explanation
we ask the reason

 

   

 
 



0 comments:

Post a Comment