Friday, November 25, 2011
பானி "பதநி"யாகி பானைக்குள் இறங்குவதால் பனை எனப் பெயர் வந்ததோ ?
Thursday, November 24, 2011
நான் சுதந்திர தேவி!
நான் சுதந்திர தேவி!
இவைமட்டுமே நான்
எனப் பண்ணிய உபாதை
முலைகளின் மொக்கும்
அல்குலின் சோகையும்
இறகுகளுக்காய் ஒரு
பண்டமாற்று!
ஆடையில்லாததால்
என்னிடம்
அலங்கோலங்கள் இல்லை!
அம்மணம் அம்மணம்
தானே சகலமும்!!
என் மூலாதரத்தில்
மூண்டது வேள்வி
பிசுத்துஅகன்றது
ரோமக்காலுடன் நாளமும்
கிளம்பிய நாழியில்
கண்டத்தில் சுழன்றது
முடிச்சு வேலிக்குக்
கொடிகாட்டுது
நான் சுதந்திர தேவி!!
படத்திற்கு நன்றி: kalachuvadu.com
இவைமட்டுமே நான்
எனப் பண்ணிய உபாதை
முலைகளின் மொக்கும்
அல்குலின் சோகையும்
இறகுகளுக்காய் ஒரு
பண்டமாற்று!
ஆடையில்லாததால்
என்னிடம்
அலங்கோலங்கள் இல்லை!
அம்மணம் அம்மணம்
தானே சகலமும்!!
என் மூலாதரத்தில்
மூண்டது வேள்வி
பிசுத்துஅகன்றது
ரோமக்காலுடன் நாளமும்
கிளம்பிய நாழியில்
கண்டத்தில் சுழன்றது
முடிச்சு வேலிக்குக்
கொடிகாட்டுது
நான் சுதந்திர தேவி!!
படத்திற்கு நன்றி: kalachuvadu.com
பதமாய்ப் பதம் பதித்த பக்குவம்
பதமாய்ப் பதம் பதித்த பக்குவம்
இப்படத்தைப் பார்த்தவுடன் பாதையில், வழுக்கி விழுந்துவிடாமல், சிரத்தையுடன் வெகுநேர்த்தியாய்த் தன் அடிச்சுவட்டைப் பதித்துச் சென்றிருக்கிற தன்மானப் பிரஜையின் சாதனை தெரிகிறது!!
தமிழன் எட்வின் உணர்வுகளின் அச்சத்தையும் அவற்றின் மறைநிலைமையையும் இப்படத்தின் கீழ் வெளியிட்டிருந்தார்.
காண்க: thamizhanedwin.blogspot.com. தமிழன் எட்வினுக்கு நன்றி!
இப்படத்தைப் பார்த்தவுடன் பாதையில், வழுக்கி விழுந்துவிடாமல், சிரத்தையுடன் வெகுநேர்த்தியாய்த் தன் அடிச்சுவட்டைப் பதித்துச் சென்றிருக்கிற தன்மானப் பிரஜையின் சாதனை தெரிகிறது!!
தமிழன் எட்வின் உணர்வுகளின் அச்சத்தையும் அவற்றின் மறைநிலைமையையும் இப்படத்தின் கீழ் வெளியிட்டிருந்தார்.
காண்க: thamizhanedwin.blogspot.com. தமிழன் எட்வினுக்கு நன்றி!
அகரம் சொல்லு பாப்பா!! -- அவ்வை மகள்
அகரம் சொல்லு பாப்பா!! -- அவ்வை மகள்
அகரம் சொல்லு பாப்பா
அம்மா - அப்பா- அக்கா- அண்ணன் - அண்ணி - அத்தை - அத்தான்
அகரம் தரும் உறவு
அ ருமை நல்ல உவமை
அன்னை என்றால் அம்மா
அம்மன் பார் கண்ணு
அப்பன் பாரு கண்ணு
அம்மையப்பன் ஆக நின்று
அருள் பாலிப்பதைப் பாரு
அம்மி பாரு கண்ணு
அதன் மேல் குழவி பாரு ஒண்ணு
அசைத்து மசித்துஅதன்மேலே
அரைப்பதென்ன பாரு!!
அடுப்பு, அடுக்கு, அகப்பை, அண்டா, அகலாமான தட்டு
அஞ்சரைப்பெட்டிகுள்ளே அனைத்தும் இருக்கு கண்ணு
அமக்களமாய் அவிப்பதென்ன? அப்பம் என்று சொல்லு!
அப்பளம் பொரித்து தாரேன்! அன்னம் கொஞ்சம் உண்ணு
அன்பு கொண்டு வாழ்ந்தால்
அகம் மகிழும் ஆர்வம் பெருகும்
அடம் பிடித்து அமளி செய்தால்
அமைதி விலகிப் போகும்!!
அரளி, அலரி, அல்லி, அத்தி, அகத்தி, அவரை!
அடுத்தடுத்து அழகாய் நல்ல பசுமை காட்சி பாரு!!
அரம் ஒண்ணு பாரு இது மரம் அறுக்கும் பாரு!!
அடுத்தவர்க்கு உதவும் பண்பு அறம் என்று கூறு!!
அருகம் புல்லின் மேலே
அரணை ஓடுவதைப் பாரு!!
அரசமரத்தின் மேலே
அணியாய்ப் பறவைக் கூட்டம் பாரு!!
அழுக்கு, அழுகல், அழுகை, அவசரம், அவமதிப்பு
அவதியாகி போகும்! இவற்றைஅனுமதிக்க வேண்டாம்!!
அவ்வைப் பாட்டி வந்தே நல்ல மூதுரைகள் தந்தாள்
அதியமான் உவந்தே அவர்க்கு அரிய நெல்லி தந்தான்!
அறிவு வளரவேண்டும்
அச்சம் விலக வேண்டும்
அடக்கமும் பொறுப்பும்
அதிகம் இருக்க வேண்டும்!!
அலகு, அளவு, அம்பு, அரும்பு, அழகு தமிழ்ப் பழகு!!
அவை அவையாவன வகையறிந்து நீ எழுது தமிழ் எழுது!
அழுத்தம் மாற்றி முறையாய் சொற்கள் உச்சரிக்க வேண்டும்!!
அவனியில் தமிழ்க் குரல் ஓங்கி நிற்க நீ அரும்பணி ஆற்றவேண்டும்!!
அவ்வை மகள்
படத்திற்கு நன்றி: entertainment.xin.msn.com; itunes.apple.com
அகரம் சொல்லு பாப்பா
அம்மா - அப்பா- அக்கா- அண்ணன் - அண்ணி - அத்தை - அத்தான்
அகரம் தரும் உறவு
அ ருமை நல்ல உவமை
அன்னை என்றால் அம்மா
அம்மன் பார் கண்ணு
அப்பன் பாரு கண்ணு
அம்மையப்பன் ஆக நின்று
அருள் பாலிப்பதைப் பாரு
அம்மி பாரு கண்ணு
அதன் மேல் குழவி பாரு ஒண்ணு
அசைத்து மசித்துஅதன்மேலே
அரைப்பதென்ன பாரு!!
அடுப்பு, அடுக்கு, அகப்பை, அண்டா, அகலாமான தட்டு
அஞ்சரைப்பெட்டிகுள்ளே அனைத்தும் இருக்கு கண்ணு
அமக்களமாய் அவிப்பதென்ன? அப்பம் என்று சொல்லு!
அப்பளம் பொரித்து தாரேன்! அன்னம் கொஞ்சம் உண்ணு
அன்பு கொண்டு வாழ்ந்தால்
அகம் மகிழும் ஆர்வம் பெருகும்
அடம் பிடித்து அமளி செய்தால்
அமைதி விலகிப் போகும்!!
அரளி, அலரி, அல்லி, அத்தி, அகத்தி, அவரை!
அடுத்தடுத்து அழகாய் நல்ல பசுமை காட்சி பாரு!!
அரம் ஒண்ணு பாரு இது மரம் அறுக்கும் பாரு!!
அடுத்தவர்க்கு உதவும் பண்பு அறம் என்று கூறு!!
அருகம் புல்லின் மேலே
அரணை ஓடுவதைப் பாரு!!
அரசமரத்தின் மேலே
அணியாய்ப் பறவைக் கூட்டம் பாரு!!
அழுக்கு, அழுகல், அழுகை, அவசரம், அவமதிப்பு
அவதியாகி போகும்! இவற்றைஅனுமதிக்க வேண்டாம்!!
அவ்வைப் பாட்டி வந்தே நல்ல மூதுரைகள் தந்தாள்
அதியமான் உவந்தே அவர்க்கு அரிய நெல்லி தந்தான்!
அறிவு வளரவேண்டும்
அச்சம் விலக வேண்டும்
அடக்கமும் பொறுப்பும்
அதிகம் இருக்க வேண்டும்!!
அலகு, அளவு, அம்பு, அரும்பு, அழகு தமிழ்ப் பழகு!!
அவை அவையாவன வகையறிந்து நீ எழுது தமிழ் எழுது!
அழுத்தம் மாற்றி முறையாய் சொற்கள் உச்சரிக்க வேண்டும்!!
அவனியில் தமிழ்க் குரல் ஓங்கி நிற்க நீ அரும்பணி ஆற்றவேண்டும்!!
அவ்வை மகள்
படத்திற்கு நன்றி: entertainment.xin.msn.com; itunes.apple.com
Wednesday, November 23, 2011
மிகினும் குறையினும் வீணே! மிதமாய் இருப்பது சீரே!!
Tuesday, November 22, 2011
நேசக்கரம் நீட்டும் பைரவரும் பையன்களும்
கவனத்தில் பதிந்த படம்
வாலைக்குழைத்து வரும் நாய்தான் அது மனிதருக்குத் தோழனடி பாப்பா என்ற பாரதியின் வாக்கைப் பின்பற்றி நடந்து செல்கையில் (கீழ்ப் படம்) , நீரில் நாய் சறுக்கி விழ (மேல் படம்)-
ஆபத்தைக் கருத்தில் கொள்ளாமல் - வெகுசாமர்த்தியமான அறிவியல் அணுகுமுறையோடு - தாம் சறுக்கிவிழுந்துவிடாமல் - தற்காத்து - தற்கொண்டான் பேணி - தமது - நாயை நீரிலிருந்து மேலே தூக்கும் பொடிசுகள்
வெங்காய வரி பூண்ட மாதுளை மங்கையர்
வெங்காய வரி பூண்ட மாதுளை மங்கையர்!
இது நடையா நாட்டியமா தெரியவில்லை
கொஞ்சம் தஞ்சை வழி
மிஞ்சும் மாதுளை தான்
விஞ்சும் வெங்காயவரி
பஞ்சும் நற்பட்டும் என
நெஞ்சம் கொள்ளை கொள்ளும்
வஞ்சமில்லா வதனம் !!
தஞ்சம் என பிற உடைகள்
கெஞ்சுமும் உடை எதுவோ?
கொஞ்சம் ரகசியமாய்
கொஞ்சிச் சொன்னாலென்ன?
தலையைப் பிய்த்துக் கொள்ளவேண்டும் போலிருக்கிறது!
கேட்காமலே இருந்திருக்கலாமோ?
parisdjs.com
இது நடையா நாட்டியமா தெரியவில்லை
கொஞ்சம் தஞ்சை வழி
மிஞ்சும் மாதுளை தான்
விஞ்சும் வெங்காயவரி
பஞ்சும் நற்பட்டும் என
நெஞ்சம் கொள்ளை கொள்ளும்
வஞ்சமில்லா வதனம் !!
தஞ்சம் என பிற உடைகள்
கெஞ்சுமும் உடை எதுவோ?
கொஞ்சம் ரகசியமாய்
கொஞ்சிச் சொன்னாலென்ன?
The Bottom Half
அப்படியென்றால்?
தலையைப் பிய்த்துக் கொள்ளவேண்டும் போலிருக்கிறது!
கேட்காமலே இருந்திருக்கலாமோ?
parisdjs.com
அறையில் தமிழ்ச் சிலம்பம்
யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் வளமானதெங்கும் காணோம்!!
அரை -- அறை -- இவை உச்சரிப்பில் ஒன்று போல் தெரிந்தாலும் -
சூழலைப் பொறுத்து, சொல் அரைபடுமா அல்லது அறைபடுமா என்பது முடிவாகிறது.
அறை (கன்னத்தில் அறைவது)
123rf.com
அறை (வீடு அல்லது அலுவலக அறை)
அரை (உடலின் இடைப்பகுதி)
healthyandhappyinlife.com
அரை (உரல் -அம்மி -கிரைண்டர் - மில் போன்றவற்றில் அரைப்பது)
dinamalar.com
அரை (எண் வகையில்: ஒன்றில் சரி பாதி அல்லது ஒன்றின் கீழ் இரண்டு )
அலுவலக அறையில் வைத்து அவனை யாரோ அறைந்ததால் அவன் அரைபிணமாய்க் கீழே விழ, அவனை அரையில் கைகொடுத்துத் தூக்கிச் சென்று, காரில் போட்டு, வீட்டிற்குக் கொணர்ந்து, படுக்கவைத்து, மஞ்சள் அரைத்துப் பற்றுப் போட்டு, அரைமணிக்கொரு முறை அவனுக்கு சூடாகப் பருகத் தந்து அவனைக் கவனித்துக் கொண்டார்கள்.
அரை -- அறை -- இவை உச்சரிப்பில் ஒன்று போல் தெரிந்தாலும் -
சூழலைப் பொறுத்து, சொல் அரைபடுமா அல்லது அறைபடுமா என்பது முடிவாகிறது.
அறை (கன்னத்தில் அறைவது)
123rf.com
அறை (வீடு அல்லது அலுவலக அறை)
அரை (உடலின் இடைப்பகுதி)
healthyandhappyinlife.com
அரை (உரல் -அம்மி -கிரைண்டர் - மில் போன்றவற்றில் அரைப்பது)
dinamalar.com
அரை (எண் வகையில்: ஒன்றில் சரி பாதி அல்லது ஒன்றின் கீழ் இரண்டு )
எடுத்துக் காட்டு
அலுவலக அறையில் வைத்து அவனை யாரோ அறைந்ததால் அவன் அரைபிணமாய்க் கீழே விழ, அவனை அரையில் கைகொடுத்துத் தூக்கிச் சென்று, காரில் போட்டு, வீட்டிற்குக் கொணர்ந்து, படுக்கவைத்து, மஞ்சள் அரைத்துப் பற்றுப் போட்டு, அரைமணிக்கொரு முறை அவனுக்கு சூடாகப் பருகத் தந்து அவனைக் கவனித்துக் கொண்டார்கள்.
தாடி வேந்தர்கள்! பரிணாமத் தந்தையர்கள்!!
தோழமையில் வல்லினமும் புள்ளினமும் - குழந்தை இலக்கியச் சிந்தனைகள்
govikanna.blogspot.com
யானைகள் பாடும் பாப்பா பாட்டு: குழந்தை இலக்கியச் சிந்தனைகள்
தோழமையில் வல்லினமும் புள்ளினமும் -
அன்னம் - கொக்கு - நல்ல நாரை!
இவை யானைகட்குத் தோழரடி பாப்பா!!
என யானைகள் பாடுவதுபோல் தோற்றம் தரும் இந்த அரிய வண்ணப்படம் -
தோழமை என்று வந்துவிட்டால் எவரே பெரியவர்? எவரே எளியவர்? எனக் கேட்கிறது!!
"Parenthood" எனப்படும் பெற்றோர் கடமையை இந்த யானைகள் செவ்வனே செய்கின்றன!! குழந்தைகட்கு சமுதாயச் சிந்தனையை முதலில் போதிக்கவேண்டியது பெற்றோர்கள் தாமே!! காலுக்கடியில் ஒளிந்தபடி பெற்றோரின் விளையாட்டைக் கவனிக்கும் அந்த யானைக்குட்டிகளுக்கு - பய உணர்ச்சி விலகி - முன்வந்து - பிற உயிரினங்களுடன் தோழமை காட்டும் தைரியமும் - பண்பாடும் - கடமையும் இயல்பாகவே உருவாகுமன்றோ !!
யானைகட்கும் அன்னப் பறவைகட்கும் இடையே உள்ள இந்த நட்பார்வம் ஒரு ஆத்மார்த்தத் தோழமை என்பதை யானைகளின் கண்களில் வெளிப்படும் களிப்பிலிருந்து மட்டுமா காண்கிறோம்? அன்னப் பேடைகளின்
சிங்காரத் தோரணையிலும் அல்லவா இந்தத் தோழமை வெளிப்படுகின்றது?
குட்டிக்கரணம் போட்டுப் புரண்டு விளையாடி - யானையின் ஸ்பரிசத்திற்கும் - குறும்புக்கும் இலக்காகும் மூன்று அன்னங்கள் - யௌவன கர்வத்தோடு - யானை கெஞ்சட்டும் எனக் கொஞ்சம் பிகு பண்ணிக்கொள்ளும் மற்றொரு அன்னமுமென - இந்தக் காட்சி - இறைவனின் படைப்பில் - விந்தையும் விசித்ரமும் ஒன்றா இரண்டா என நம்மை மீண்டும் சிந்திக்க வைக்கின்றது!!
இத்தருணத்தில், ஒரு பிரபலமான குழந்தைப் பாட்டு நினைவுக்கு வருகிறது!
ஆனை ஆனை
-
- அழகர் ஆனை
அழகரும் சொக்கரும்
-
- ஏறும் ஆனை
கட்டுக்கரும்பை
-
- முறிக்கும் ஆனை
காவேரித் தண்ணியைக்
-
- கலக்கும் ஆனை
கட்டுக் கரும்பை
-
- பறிக்கும் ஆனை
தெருவெல்லாம் சுற்றி
-
- ஓடும் ஆனை
குட்டி ஆனைக்குக்
-
- கொம்பு முளைச்சுதாம்
பட்டணமெல்லாம்
-
- பறந்தோடிப் போச்சாம்
---
இப்பாடலின் கற்பனை வளம் பாராட்டுக்குரியது!!
கனமான யானைக்குட்டிக்கு - பறக்கவேண்டும் என்கிற ஆசை வருகிறது என்றால் - அது சும்மா வந்து விடாது - வலிய விலங்குகளான யானைகள் - மெல்லினங்களான புள்ளினங்களோடு நட்பு கொண்டு - சேர்ந்து விளையாடிக் கூடி வாழும் சமூக உறவுகளால் மட்டுமே சாத்தியமாகும்!!
மனிதர்களிடையே குடிமை - கூட்டுறவு - சமரசம் ஆகியவை இன்றியமையாதவை - இவற்றைப் போதிப்பது என்பது கல்வியின் அடிப்படைக் கடப்பாடு!! இப்பண்புகள் - குழந்தைப்பருவத்திலேயே விதைக்கப்படாலன்றி - முழுமையான பயன் தரா!! இவ்வகையில் குழந்தை இலக்கியங்கள் மிகுந்த கவனத்தோடு படைக்கப்படவேண்டும் என்பதை படைப்பாளிகள் எவருமே கருத்தில் கொள்ளவேண்டும்.
சரி - சரியான வகையிலே குழந்தை இலக்கியத்தைப் படித்துவிட்டால் மட்டும் போதுமா? அது குழந்தைகளைச் சென்று அடைந்துவிடுமா? - என்றால் "இல்லை."
ஏனெனில் - குழந்தைகளுக்கும் குழந்தைகள் இலக்கியத்திற்குமிடையே பெற்றோரும் - ஆசிரியர்களும் - ஊடகங்களும் வழிமறித்து நிற்கிறார்கள்!!
இந்த மூவரின் பலம்/பலவீனம் - பொறுப்பு/பொறுப்பிலாப் போக்கு ஆகியவற்றால் மட்டுமே - குழந்தை இலக்கியத்தின் பயன்பாடு அமையப் பெறுகிறது.
குழந்தை இலக்கியங்கள் மிகச் சரியான வழியிலே குழந்தைகளைச் சென்று சேரவேண்டுமென்றால் - பெற்றோர்களும் - ஆசிரியர்களும் - கொஞ்சம் கூடுதல் சிரத்தைஎடுத்து - இலக்கியம் கூறும் - கூறவரும் சேதியைச் சிந்தாமல் சிதறாமல் - பொத்தி எடுத்துக் குழந்தைகட்கு வழங்கவேண்டும் என்பது அடிப்படை.
இந்த போதனா முறையிலே - சிறப்பான வண்ணப்படங்கள் - மிகச்சரியான எடுத்துக் காட்டுக்கள் - தேர்ந்தெடுத்த வாசகங்கள் - போதிப்பவரின் குரல் - தொனி - முகபாவனைகள் - உடல் அசைவுகள் - ஊடகங்களின் வலிமை - சார்பு ஆகியன முக்கியமானவை.
குழந்தைகள் மனிதகுலத்தின் வித்துக்கள் என்ற அசைக்க முடியா விதியை மனத்திலே பதியவைத்தபடி பெற்றோரும் - ஆசிரியர்களும் - ஊடகங்களும் செயல்படுவரேயானால் - நம் நாடு என்னும் தோட்டத்தில் நாளை மலரும் முல்லைகளாக நம் குழந்தைகள் - நல்ல குழந்தைகளாக - வல்லக் குழந்தைகளாக உருவெடுப்பது நிச்சயம்!!
Subscribe to:
Posts (Atom)