Subscribe:

Pages

Sunday, January 23, 2011

உங்களுக்குத் தெரியுமா?- விடை

உங்களுக்குத் தெரியுமா?

முப்பழம், நாற்றிசை, ஐம்பொறி, அறுசுவை, எழு நிறம், எண்மர், நவதானியம் - இவை ஒவ்வொன்றும் யாவை?

உங்கள் விடையைச் சரி பார்க்க வேண்டுமா?
விடை
முப்பழம்:  மா, பலா, வாழை
நாற்றிசை: கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு
ஐம்பொறி: மெய், வாய், கண், காது, மூக்கு 
அறுசுவை: உப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு, இனிப்பு, கைப்பு
எழு நிறம்: ஊதா, கரு நீலம், நீலம், பச்சை, மஞ்சள். இளஞ்சிவப்பு, சிவப்பு 
எண்மர்: அஷ்டதிக் கஜங்கள் என்று சொல்லப்படுகின்ற திசைக்  காவலர்கள். கிழக்கு, மேற்கு, 
வடக்கு, தெற்கு எனப்படும் நான்கு திசைகளுக்கும் இடையே அமையப்பெறும் சந்தித்திசைகளான வடமேற்கு, வடகிழக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு ஆகியனவற்றையும் திசைகளாகக் கொள்ளுகின்றபோது மொத்தம் எட்டு திசைகள் வருகின்றன. திசைக்கு ஒரு காவலன் என மொத்தம் எட்டு பேர்.

நவதானியம்: நெல், கோதுமை, துவரை, பாசிப்பயறு, கொண்டைக் கடலை, மொச்சை, உளுந்து, எள், கொள்,

 
 
 
 

0 comments:

Post a Comment