Subscribe:

Pages

Tuesday, November 15, 2011

கழுதைமேல் ஊர்வலம் போன நெப்போலியன்!! !


கழுதைமேல் ஊர்வலம் போன நெப்போலியன்!!

தோல்வியைத் தழுவியதற்குத் தண்டனையாக கழுதை மேல ஏற்றப் பட்டு நாடு கடத்தப்படும் நெப்போலியன்!! (படத்திற்கு நன்றி: en.wikipedia.org)

பழங்காலத்தில், நம்மூரிலும்,  தவறு செய்பவர்களை - கரும்புள்ளி - செம்புள்ளி குத்தி - கழுதை மேல்  ஏற்றி ஊர்வலம் அனுப்புவார்களாம்!! - சொல்லக் கேள்வி

மேளம் கொட்டி நையாண்டி செய்து  நெப்போலியனைத் துரத்துகிறார்கள் - என்று  இப்படம் காட்டுகிறது  அவமானத்தால் - நெப்போலியன் தலைகுனிந்தபடி அம்ர்ந்திருப்பதையும்  --,   காணுங்கள்!!

அது சரி!! இவ்வாறான சவாரிகளில் - எதிர்த் திசையில்தான் ஆள் அமரவேண்டுமோ?    என்ன ஏற்பாடடா சாமி!!

ஆனைமேல் அம்பாரி - குதிரைமேல் ஒய்யாரம்  என்ற கதையாய் பவனி வந்த உலக மாவீரனுகே  இந்தக்  கதியென்றால் --அதிகாரம் - பதவி - அந்தஸ்து  இவற்றிற்கு -எத்தனை அற்ப ஆயுள் என்பது விளங்குகின்றதல்லவா?

நம் நாட்டின் இன்றைய  அரசியல்வாதிகளின் நிலையைக் கொஞ்சம் இங்கே ஒப்பீடு செய்து பார்க்கத் தோன்றுகிறது.

பதவியில் தூக்கி வைப்பவர்களே - பதவியிலிருந்து தூக்கி எறியவும் துணிவார்கள்  என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? 

0 comments:

Post a Comment