கழுதைமேல் ஊர்வலம் போன நெப்போலியன்!!
தோல்வியைத் தழுவியதற்குத் தண்டனையாக கழுதை மேல ஏற்றப் பட்டு நாடு கடத்தப்படும் நெப்போலியன்!! (படத்திற்கு நன்றி: en.wikipedia.org)
பழங்காலத்தில், நம்மூரிலும், தவறு செய்பவர்களை - கரும்புள்ளி - செம்புள்ளி குத்தி - கழுதை மேல் ஏற்றி ஊர்வலம் அனுப்புவார்களாம்!! - சொல்லக் கேள்வி
மேளம் கொட்டி நையாண்டி செய்து நெப்போலியனைத் துரத்துகிறார்கள் - என்று இப்படம் காட்டுகிறது அவமானத்தால் - நெப்போலியன் தலைகுனிந்தபடி அம்ர்ந்திருப்பதையும் --, காணுங்கள்!!
அது சரி!! இவ்வாறான சவாரிகளில் - எதிர்த் திசையில்தான் ஆள் அமரவேண்டுமோ? என்ன ஏற்பாடடா சாமி!!
ஆனைமேல் அம்பாரி - குதிரைமேல் ஒய்யாரம் என்ற கதையாய் பவனி வந்த உலக மாவீரனுகே இந்தக் கதியென்றால் --அதிகாரம் - பதவி - அந்தஸ்து இவற்றிற்கு -எத்தனை அற்ப ஆயுள் என்பது விளங்குகின்றதல்லவா?
நம் நாட்டின் இன்றைய அரசியல்வாதிகளின் நிலையைக் கொஞ்சம் இங்கே ஒப்பீடு செய்து பார்க்கத் தோன்றுகிறது.
பதவியில் தூக்கி வைப்பவர்களே - பதவியிலிருந்து தூக்கி எறியவும் துணிவார்கள் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?
0 comments:
Post a Comment