Subscribe:

Pages

Thursday, November 24, 2011

நான் சுதந்திர தேவி!

நான் சுதந்திர தேவி!


இவைமட்டுமே நான்
எனப் பண்ணிய உபாதை  
முலைகளின் மொக்கும்
அல்குலின்  சோகையும்
இறகுகளுக்காய்  ஒரு 
பண்டமாற்று!
ஆடையில்லாததால்
என்னிடம்
அலங்கோலங்கள் இல்லை!
அம்மணம் அம்மணம்
தானே   சகலமும்!!
என்  மூலாதரத்தில்
மூண்டது  வேள்வி
பிசுத்துஅகன்றது
ரோமக்காலுடன் நாளமும் 
கிளம்பிய நாழியில்
கண்டத்தில் சுழன்றது
முடிச்சு வேலிக்குக் 
கொடிகாட்டுது
நான் சுதந்திர தேவி!!

படத்திற்கு நன்றி:  kalachuvadu.com

0 comments:

Post a Comment