Subscribe:

Pages

Saturday, November 12, 2011

இறை வணக்கம் - அவ்வைமகள்


இறை வணக்கம் 

காட்சி  இல்லை நான்
காணுதல் உண்டு
சொற்கள் இல்லை அவை
கேட்பதுண்டு
அசைவு இல்லை அங்கே
செய்கை  உண்டு
எனக்கு  முன்னே நீ
செல்லுதல் தோன்றும்
எனக்குப் பின்னே நீ
நின்றிடல் புரியும்
ஈனச் செயலும் பழி
ஊனச் சொல்லும்
நான் இயற்றா வண்ணம்
நீ காத்திடல் உண்மை
எங்கணும் உன் சேய்மையில்
நான் இயங்குதல் தொடர
தான் முந்து நீ வந்தெனை
ஆட்கொள்ளவேண்டும்!!
தனிவகைப் பெண்ணெனப்
படைத்தனை! உரைத்தனை!
நான் தளராதென்றும் உன்
பணி செயல் வேண்டும்
ஞாலமர் ஞானியர் பணிந்
தேற்றிடும்  பரமனே!
வான் விளக்கிடைப் பொருந்தும்
உன் சோதி நான் தொழுவேன்!!


 நன்றி (படம்):  www.travelblog.org


அவ்வைமகள்


0 comments:

Post a Comment