சினம்: ரௌத்ரம் பழகு என்று சொன்னால் தான் என்ன? இப்படியா?
பெண்கள் கோபப்படக்கூடாதாஎன்ன? "ரௌத்ரம் பழகு!" என்று பாரதியே சொல்லிவிட்டுபோயிருக்கிறானே! என வரிந்துகட்டிப் பேசும் பெண்களின் எண்ணிக்கை மிகுந்து வருகிறது என்பதை இப்புத்தக அட்டை காட்டுகிறது.
அதிகரித்துக் கொண்டே வரும் பெண்களின் கோபத்திற்கு என்ன காரணம்?
பெண்களுக்கு-எதிரிடையான சூழல்கள் பெருகிவருகின்றன!!
உண்மை -
இருப்பினும் -
இச்சூழல்களில் முக்கால் பாகம் இவர்களில் மீது திணிக்கப்படுவது என்றாலும் கால் பாகம் இவர்களாகவே வரவேற்கும் பிரச்சனைகள் தாம்!!
மேலும், பிரச்சனைகளை சரியாக அணுகத் தெரியாமலும், பிரச்சனைகளை கவனமாக முன்கூட்டியே தவிர்க்கத் தெரியாமலும் பல பெண்கள் சிரமப் படுவதும் புரிகிறது.
தமிழகத்தில் மட்டுமல் - இந்தியாவில் மட்டுமல் - உலகெங்கிலும் - பெண்களின் உடல் நலமும் - உள நலமும் - நலிந்துவருவதாகப் பேசப் படுகிறது. அதே நேரத்தில், ஆடை அணிகலன் அலங்காரங்கள் மிகுந்து பெண்கள் நாகரீகம் என்ற பெயரில் ஆபாசங்களை - பெண் தர்மத்துக்கு எதிரான நடவடிக்கைகளை தாமே முன்வந்து அரவணைத்துக் கொள்ளும் போக்கும் வளர்ந்து வந்திருக்கிறது!!
இந்நிலையில் இன்றைய பெண்களின் நிலையைப் பார்த்தால் வள்ளுவப் பெருமானின் வாக்கு நினைவுக்கு வருகிறது:
நுண்மான் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மான் புனைபாவை யற்று "
(இதில் ஆண்பாலைப் பெண்பாலாக்கிக் கொள்ள வேண்டும்!)
சுதந்திரம் என்ற பெயரில் - உரிமை என்ற பெயரில் - கவர்ச்சிக்கும் - உணர்ச்சிக்கும் இலக்காகி - விரைவிலேயே எழிலையும் - இயல்பையும் - ஆரோக்கியத்தையும் - இணக்கத்தையும் இழந்து - வீழ்ந்துபோகின்ற பெண்கள் - வீட்டிற்கும் சமுதாயத்திற்கும் பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்துவார்கள்!!
படத்திற்கு நன்றி manisenthil.com
| ||
பெண்கள் மனிதகுலத்தின் ஆணிவேர்கள் - இந்த வேர்கள் பலவீனப்படுவது - கூடாது - பெண்களின் நல வாழ்வின் பால் நம் கரிசனமும் - கவனமும - வளரவேண்டும்!! |
0 comments:
Post a Comment