Subscribe:

Pages

Wednesday, June 15, 2011

பெண் முன்னேற்றமெல்லாம் வெறும் பேச்சோடுதானா?

பெண் முன்னேற்றமெல்லாம் வெறும் பேச்சோடுதானா?



பெண்கள் முன்னேற்றம் என்பது பற்றி சிந்திக்கும்போது
பெண்கள் பலவகையில் முன்னேறியிருக்கிறார்கள் என்பதனை ஒத்துக்கொள்ளாதாவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கும்.

கல்வியிலாகட்டும், வேலைவாய்ப்பிலாகட்டும் பெண்கள் ஆணுக்கு சரி நிகர்சமானமாய் வந்துவிட்டார்கள்.

சொல்லப்போனால், ஆண்களைக்காட்டிலும் ஒருபடிமேலே என்று சொல்லும்படியாகத்தான் அவர்கள் இன்று பரிமளிக்கிறார்கள்.

பெண்களுக்கான தனிக்காவல் நிலையங்களும், சிறப்புச்சட்டங்களும் வந்திருப்பதை நாம் அனைவரும் அறிவோம்.

பெண்கள் வியாபாரிகளாகவும், தொழில் முனைவர்களாகவும், தொழில் அதிபர்களாகவும் இன்று உயர்ந்தோங்கியிருக்கிறார்கள்.

ஆண்கள்மட்டுமே செய்யமுடியும் என்கிற எந்தஒரு வேலையையும் அவர்கள் வெகுசிறப்பாக செய்துமுடிக்கிறார்கள். வான், கடல் என எதையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. எங்கும் அவர்கள் அழுத்தமாய்த்தம் முத்திரையைப் பதித்து வருகிறார்கள்.

ஏறக்குறைய பெண்களைப்பற்றிய வகையில் மிகப்பெரிய சமூக மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ள காலகட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இந்நிலையில் மூத்த பெண்மணிகள் இன்றைய இளம் பெண்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என அறிய முற்பட்டேன். 
இந்த விருப்பத்திற்கு ஏற்றாற்போல், இங்கு,  வாழ்ந்துவரும் தமிழ் மூதாட்டி  ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.  அவரிடம் பொதுவான விஷயங்கள் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். பெண்கள் பிரச்சினை பற்றிப் பேசும்போது,   பெண்களுள்ள சிக்கல் பற்றி அவர் கூறியதை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.


"தன்னடக்கம், கற்பு நெறி, நல்ல பழக்கவழக்கங்கள் என்பவை முன்னெப்போதைக்காட்டிலும் இன்று பெண்களுக்கு கூடுதலாய்த் தேவைப்படுகின்கிறது என்பதை நான் சொல்லத்தேவையில்லை. இது நம் அனைவருக்கும் இப்போது வெளிப்படையாய்த் தெரிந்திருக்கின்ற விஷயம் தான்!" என்றார்.

"முன்னேற்றம் என்ற பெயரில் எதனை அடைய விரும்புகிறோம் அதற்காக எதனை  அடகுவைக்கிறோம் என்பதிலே தெளிவு நிலை இருந்தாலொழிய பெண் முன்னேற்றம் உண்மையில் எந்தப் பலனையும் தராது "என்றார்.

"செழிப்பானதொரு தருணத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருந்தாலும், பெண்களுக்குப் பல இடர்பாடுகள் இருக்கத்தான் செய்கின்றன" என்றார். 

வேலைக்குச்செல்வது என்றபெயரில், மிக இளவயதிலேயே, தொழிற் கூடங்களுக்குச்சென்று அங்கு தொழில்ரீதியான தொல்லைகளில், ஆரோக்கியப்பிரச்சனைகளில் பெண்கள் மாட்டிக்கொண்டு விடுகிறார்கள் என்று சொன்னார்.

ஒருசில இளம் பெண்கள் ஆணைப்போல் உடையணிந்து அவனைபோல் சுதந்திரமாக வாழ்வதே பெண்கள் முன்னேற்றம் என்கிற மாயையில் இருக்கிறார்கள் - என்றார்
 
பொதுவாக, பெண்களுக்கு குடும்பத்தில் கவனம் குறைந்து வருவதாகத் தெரிகிறது என்றார்.

மாதர்,  தம்மை  இழிவுசெய்துகொள்கிற மடமையைக் கொளுத்துவோம்" என்றார்.


அம்மூதாட்டியை   நேருக்கு நேர் கண்களால் சந்தித்து வினவினேன், "நீங்கள் என்ன சொன்னீர்கள்?" என்று  


மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் என்று பாரதி சொன்னதை நாம் இன்று வேறுவிதமாகப்  புரிந்து கொள்ளவேண்டும்--

இன்று, "மாதர் தம்மைத்தாமே இழிவு செய்துகொள்ளுகின்ற மடமையைக்கொளுத்துவோம்!" என்றார் உறுதியாக.

இது அனுபவப் பெண்மணியின் வார்த்தைகள்.

பெண் முன்னேற்றமெல்லாம் வெறும் பேச்சோடுதானா?

இந்த நேரத்தில் எனக்கு சட்டென்று நினைவுக்கு வந்த ஒரு கவிதை என்றோ படித்தது, கவிஞர் எவரென நினைவில்லை.

பெண் ஆபாசப் போஸ்டரின் மேல் தாரடிக்கபோனார்கள் 
ரவிக்கைக்குக்  கையில்லை தொப்புளில் சீலையில்லை
முதுகில்  ஜன்னல் முன்புறம் கப்பறை      

அவ்வைமகள் (Dr Renuka Rajasekaran) 


0 comments:

Post a Comment