Subscribe:

Pages

Wednesday, June 29, 2011

பாம்புச் சுருள்: வலம்புரியா? இடம்புரியா?

பாம்புச் சுருள்: வலம்புரியா? இடம்புரியா?

பாம்புகள் மூன்று காரணங்களுக்காகச் சுருளுகின்றன எனப் பார்த்தோம்.
பாம்புகள் தம் உடலைச் சுருட்டிக் கொள்ளுகிறபோது, அவை வலம்புரியாகச் சுருளுமா அல்லது இடம்புரியாகச் சுருளுமா என்பது நம் அடுத்த கேள்வி. 

 
 


பெரும்பாலான பெண் பாம்புகள் வலம்புரியாகச் சுருண்டு
கொள்கின்றன. பெரும்பாலான ஆண் பாம்புகளோ இடம்புரியாகச் சுருண்டு கொள்கின்றன. ஆகவே, பாம்பின் சுருள் திசையை வைத்தே அது ஆணா அல்லது பெண்ணா என்பதனைப் பெரியவர்கள் சொல்லிவிடுவார்களாம். 

பாம்பின் உள்ளுறுப்புகளின் அமைப்பு மற்றும் அளவு, மூளையின் இரு பாதிகளுக்கு இடையே உள்ள வித்தியாசங்கள் ஆகியன பாம்பின் உடல் சுருட்டல் வலம்புரியா அல்லது இடம்புரியா என்பதனை  முடிவு செய்கின்றன.   

ஆண் பாம்பிற்கும் பெண்பாம்பிற்கும் ஒன்றை ஒன்று ஈடு செய்வதான இந்த சுருள் திசை வேறுபாடு இனச்சேர்க்கைக்கு மிகவும் ஒத்தாசையாக இருக்கிறது.



 

0 comments:

Post a Comment