Subscribe:

Pages

Tuesday, June 14, 2011

விதி: ஆதிரையின் கவிதை

விதி

 
திதி, தேதி, தாதி, வீதியென
விளக்கம் கூறும் சொற்கள் பலவிருக்க
இது என்ன "விதி" என்றொரு சொல்?
விதிக்கப்பட்டது விதி என்றால்
எவர் விதித்தார்? ஏன் விதித்தார்?
பாரடேயின் விதி மின்பகுப்பை நிர்ணயிக்கும்
நியூட்டனின் விதி இயக்கத்தை இட்டுரைக்கும்
மெண்டலின் விதி மரபணுவை மகிழ்ந்துரைக்கும்
வெப்பவியல் விதி பிரபஞ்சத்தின் நிலையுரைக்கும்
ஆனால் மனிதன் கூறுகின்ற
"விதி"யை எவன் உரைத்தான்
பெருமைக்கும் ஏனை சிறுமைக்கும் அவரவர்
கருமமே கட்டளைக்கல்
என்ற வள்ளுவன் விதியே வாழ்வியல் விதி
தலைவிதி என்றும் கொடுப்பினையென்றும்
தன்னையும்சகமனிதர்களையும் இழிப்பது
விதியல்ல இவை சதியேதான்
இனியொரு விதிசெய்வோம்
அதை எந்த நாளும் காப்போம்
விதியென்று வீணுரைக்கும்
வில்லங்கவாதிகளை
விதிப்படி இடித்துரைப்போம்
விதி விதிப்படி நடக்கும் ஆனால்
மதியோ விதியை வெல்லும் என்று

                                            ஆதிரை (Sri Madhavi Rajasekaran)

0 comments:

Post a Comment