Subscribe:

Pages

Wednesday, June 22, 2011

"சத்தியம் வெல்லும்" எனும் வாசகத்தை நிச்சயமாக நீ நம்புகின்றாயா?

நம்புகின்றாயா? நம்புகின்றாயா?



சத்யமேவ ஜெயதே
வாய்மையே வெல்லும்   


"சத்தியம் வெல்லும்" எனும் வாசகத்தை 
நிச்சயமாக நீ  நம்புகின்றாயா?
பொய்மையும் புரட்டும் தேசியம் ஆனபின்னும் 
சத்தியம் நிச்சயம் வெல்லும் என்று 
இன்னமும் கூட நீ நம்புகின்றாயா?

ஆமென்பாய்!!
நீ மேதாவி! பெரிய மேதாவி!
உலகம் உனக்கொரு சுண்டைக்காய்!
உன்னைப் போன்ற அறிவு ஜீவிக்கு 
இங்கே என்ன  பெயர் தெரியுமா?
பைத்தியம்! முழுப் பைத்தியம்!!
உன் வேதாந்தத்தை உடைப்பில் போடு 
மீண்டும் கேட்கிறேன் சொல்!
மனிதத்துவம்  மரித்து மண்மூடிப் போனபின்னும் 
"சத்தியம் வெல்லும்" எனும் வாசகத்தை 
இன்னமும் கூட நீ நம்புகின்றா?

தெரிந்து கொள்
ஆத்மாக்களே இல்லாத வக்கிர உலகமிது 
இதில் மகாத்மா என்பதெல்லாம் மறக்கப்பட்ட சரித்திரம்
காந்தியைச் சுட்டபோது அவர் சாகவில்லை 
கண்ணாடிச் சட்டத்தில்  சிறையிட்டே கொன்றுவிட்டார்கள்! பாவிகள்!!

உண்மைஎன்றால் "என்ன விலை?" என்று கேட்கும்  உத்தம உலகமிது
மீண்டும் யோசித்துச் சொல்
"சத்தியம் வெல்லும்" எனும் வாசகத்தை 
இன்னமும்  கூட நீ நம்புகின்றாயா?

அவ்வைமகள் (Dr Renuka Rajasekaran)
 
 
    

0 comments:

Post a Comment