Subscribe:

Pages

Friday, June 3, 2011

கணநேரத் துல்லியம்: படம்பிடிக்கும் கலை; அற்புதப் படைப்பாற்றல்

கணநேரத் துல்லியம்: படம்பிடிக்கும் கலை: அற்புதப் படைப்பாற்றல் 

உயர்திணைப் பொருட்களைப் படம்பிடிப்பது என்பது  சுலபமான செயல் அல்ல. உயிருள்ள ஜந்துக்கள் இயங்கும்போது  அவற்றின் அதிசய  நிலைகளைப் பம்பிடிப்பது என்பது பிரம்மப் பிரயத்தனம் தான். ஒரு படம்பிடிக்க, மணிக்கணக்கில் நாள் கணக்கில் தவமிருக்க வேண்டும்.

.சென்னைப் பேராசிரியர் இராஜா கணேசன் அவர்கள், தனக்கு துரைராஜ் கோவிந்தராஜ் அவர்கள் அனுப்பிவைத்திருந்த  வண்ணப்படங்களை எனக்கு அனுப்பி வைத்திருந்தார். அவற்றை உங்களுக்காக இங்கே இணைக்கிறேன், ஒவ்வொன்றிற்கும் ஒரு தலைப்பு தந்தது மட்டும் என் உபயம்.  

பட்டுப்  பூச்சிக்கும் வண்ணாத்திப் பூச்சிக்கும் வித்தியாசம் தெரியாதா எனக்கு? 
சிறகில் உமை மூடி - அருமை கதை கூறி - உறங்கவைத்தேனடா!!
போட்டோ எடுக்கறான்! திருஷ்டி பட்டுடப் போகுது - டக்குன்னு வாங்கிக்க!! 

  என்னை தூக்கிட்டுப் போற மாதிரி அவனுக்கு நெனப்பு!! ஆனா அவன நான் தானே சுமந்துகிட்டுப் போறேன்?
யோகாவாம்! குண்டலினியாம்! தளர்வுப் பயிற்சியாம்! தியானமாம்! ஜிம்மாம்!! ஏனுங்க இப்படி காசைக் கரைக்கிறீங்க? சும்மா ஒரு திட்டு மேல காலையும்  கையையும் கிளப்பிப் போட்டு மூஞ்சத் தொங்கப் போட்டுக் கவுந்து படுங்க!
"மூலாதாரத்தின் மூண்டெழு கனலை" வளப் படுத்தும் கலை  இதுதாங்க!
முற்றும் துறந்த இந்த ஞானி சொன்னாக் கேட்டுகிடணும்  
       

அழகே! ஆபத்து!!பின்னாலப் பாக்காமச் சிட்டெனப் பற!!

நாவால் நக்குது ஓட்டச்சிவிங்கி, தானும் நன்றாய்க் காட்டுது  பெட்டை அணில்!

மேல  ஏறிச் செய்யற வேலையை நம்ம  கிட்டக் கொடுத்தா என்ன? கீழ  தான் ஏகப்பட்ட லேபர் ப்ராப்ளம் இருக்கே!




 என்ன பாக்கறே? தப்பிக்கமுடியாது கண்ணு! ராவணன் சீதையத் தூக்கினக் கணக்கா கபால்னு அள்ளி வந்தது விடறதுக்கா? 


பச்சோந்தின்னு நம்மளைப் பார்த்துப் பேசறது - இவனுகளைப் பார்த்துதான நாம  இந்த   டெக்னிக்கக்  கத்துக்கிட்டது!
எங்களை ரேசுல  ஜெயிக்க உங்களால முடியுமா?

இதுக்கெலாம் கொடுத்து வைக்கணும்? இந்த ஜென்மத்துல மட்டுமில்ல எந்த ஜென்மத்துலேயும் உமக்கு இந்த சுகம் கிடைக்காது! 
நிற்பதுவே! நடப்பதுவே!! பறப்பதுவே!!! நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ? உமக்குள் ஆழ்ந்த பொருளில்லையோ?  
நத்தை மடி மெத்தையடி!


ஏய்! ஒன் வாயில இருக்க மசால் வடையக் கொஞ்சம் குடு! ஒரு கடி கடிச்சிட்டு கொடுத்தடறேன்! ஒன்ன ஒன்னும் செய்ய மாட்டேன்! ப்ராமிஸ!!
ஒங்கள்ள பல பேர் எங்கள மாதிரித்தான் பாக்கறாங்க! ஆந்தைப்  பார்வைனா கொத்திக் கொதறிடுவோம்.


இனி நீயின்றி நானில்லை! நானன்றி  நீயில்லை! வா கண்ணே! எனக்குள் ஐக்கியமாகு! ஈருடல் இணைய ஓருயிராவோம்   


மொதல்ல பேடன்ட்டுக்கு அப்பளை பண்ணனும்! நம்மளைப் பார்த்து "புக்திமான்"கிற பேர்ல ஒரு கேரக்டர் ரெடி பண்ணிட்டு, சொந்தமா  எதையோ புதுசா உருவாக்கின மாதிரி தம்பட்டம் அடிச்சிப்பானுக!  

 உமக்குப் பிடித்த மீனுடன் இந்த ஒய்யார வளைவில் உமக்காய்க் காத்திருக்கிறேன் நாதா!!


குதிரை பறக்கற மாதிரி படம் போடுவானுங்க! ஆட்டுக்குட்டினா இளக்காரம்?
கொஞ்சம் அந்தக் குதிரையை ஒண்டிக்கு ஒண்டி வரச்சொல்றது!
நாம  பறக்கிற பறப்புல, அது நொண்டிக் குதிரையாகுமா   மொண்டிக் குதிரையாகுமான்னு பாத்துடுவோம்!!      



நாயே வெல்லும்! முயல் தோற்கும்!! 


வாசெல்லம்! பயப்படாமக் குதி! பாட்டி அப்படியே வாயால ஒன்ன வாங்கிகறேன்!!!   



தும்பியப் பிடிச்சது வாட்டமாப் போச்சு! ஏரோப்ளேன் வேகத்துக்குப் பறக்க முடியுது!! 

மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்! இது முழு நிலவு! இது முழு நனவு!!  இந்த மரமோ துளிர் விடுக்கும்! நான் மீண்டும் குடி பெயர்வேன்!!!! ம்ம்ம்ம்ம்ம்ம் ---    


முகத்தில் முகம் பார்க்கலாம்! 



அழகையும் தெறமையையும்  வெளிப் படுத்தணும்னு நீங்க சொல்லிக் கேள்வி! 
நீ விரிவதற்காய்த் தவமிருப்பேன்! உன் மடிவிரிப்பில் பதுங்கிடுவேன்!!
 ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்  தன் பிள்ளை தானே வளரும்

1 comments:

Unknown said...

Adada adada solla vaarathaiye illaiye yenna azhagu yengala maathiriyaana rasanai ullavangakuku ithu oru periya virunthu

Post a Comment