Subscribe:

Pages

Saturday, January 15, 2011

மங்கலமாய்ப் பொங்கிடுவோம் கும்பிடுவோம் கூடி

மங்கலமாய்ப் பொங்கிடுவோம் கும்பிடுவோம் கூடி


பொங்கல் என்றாலே நாட்டுப்புற மொழிதான் நம் நினைவுக்கு வரும். பொங்கல் குறித்து என்றோ நான் எழுதிய கவிதை ஒன்று என் நினைவுக்கு வந்தது. அதை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.


ஒருகலமா ரெண்டுகலமா புத்தம் புது நெல்லு புத்தம்புது நெல்லு
பொங்கலுக்குப் பொங்கிவைக்க அரைக்க வேணும் சொல்லு

ஒரு  நெலையா ரெண்டு நெலையா ஆலப்பாகுவெல்லம் ஆலப்பாகு வெல்லம்
இடிச்சித்தூளாக்கி நான் போடவேணும் சீக்கீரமா நீ சொல்லு

ஒரு கட்டா ரெண்டு கட்டா நாமக்காரக்கரும்பு நாமக்காரக்கரும்பு
பூஜையில வைக்கவேணும் எடுத்துவந்து கட்டு

ஒரு படியா ரெண்டுபடியா மொச்சகொட்ட சொல்லு மொச்சகொட்ட சொல்லு
தோலஉறிச்சி நானு வெச்சிடணும்  காயிகூட்டுலதான் போட

ஒருமுழமா ரெண்டுமுழமா மஞ்சசாமந்தி பூவு மஞ்சசாமந்தி பூவு
சூரியனுக்கு பிடிச்சதது நீளமா நீ கட்டு

தைப்பொறந்தா வழிபொறக்கும் நம்மகவலையெல்லாம் போகும் கவலையெல்லாம் போகும்
கை நெறைய துட்டு வரும் மகிழ்ச்சி வந்து சேரும்

பொங்கலோ பொங்கலுன்னு வாய் நெறயக்கூவி வாய் நெறயக்கூவி
மங்கலமாய்ப் பொங்கிடுவோம் கும்பிடுவோம் கூடி

அவ்வைமகள் (பாமரம் கவிதைத்தொகுப்பிலிருந்து)

0 comments:

Post a Comment