Subscribe:

Pages

Saturday, January 22, 2011

இலக்கணம்


இலக்கணம் 

விதி

எண்ணிக்கையுடன் வரும்  பெயர்ச் சொற்களை எழுதுகின்றபோது, ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து ஆகிய எண்பகுதிகள் மாற்றம்பெறும்.

எடுத்துக்காட்டு
ஒற்றிலை, ரெட்டிலை, முப்பழம், நாற்றிசை, ஐம்பொறி, அறுசுவை, எழு நிறம், எண்மர், நவதானியம், பதின்மர்

பொருள்

ஒற்றிலை என்பது ஒற்றை இலை
ரெட்டிலை என்பது இரண்டு இலைகள்
முப்பழம் என்பது மூன்று பழங்கள்
நாற்றிசை என்பது நான்கு திசைகள்
ஐம்பொறி என்பது ஐந்து பொறிகள்
அறுசுவை என்பது ஆறு சுவைகள்
எழுநிறம் என்பது ஏழு நிறங்கள்
எண்மர் என்பது எட்டு நபர்கள்
நவதானியம் என்பது ஒன்பது தானியங்கள்
பதின்மர் என்பது பத்து நபர்கள்

0 comments:

Post a Comment