Subscribe:

Pages

Saturday, April 30, 2011

என்னம்மா எப்படி இருக்கே? டாக்டர் எம் எஸ் சுவாமிநாதன்

என்னம்மா எப்படி இருக்கே?-  டாக்டர் எம் எஸ் சுவாமிநாதன்

அத்தனைச் சன்னமானதொரு குரல், தொனிக்கும் விதத்திலும், கண்கள் கொடுக்கும் இதத்திலும் அவர் இளைய விஞ்ஞானிகளை எத்ததனை நேசிக்கிறார் என்பதனைக் காட்டும். 

முகத் தோற்றமாகிலும் சரி, பார்வையாகிலும் சரி, வார்த்தையாகிலும் சரி. இணக்கம் என்றால் அத்தனை  இணக்கம். அவருக்கு இவையெல்லாம்  பிறவிப் பண்புகளாகவே  அமையப் பெற்றன எனறே தான் எண்ணத் தோன்றுகிறது. 

இம்மாமனிதரின் வார்த்தைகள் ஒவ்வொன்றிலும் ஞானம் பிறக்கும், அந்த ஞானம் அலட்டலில்லாமல், ஆர்பாட்டமில்லாமல்  கனிவாய்த் தீண்டி,  தண்மையைக் கக்கினாலும் எனக்குள் அது ஒரு ஆர்வப் பிரவாகத்தையே  கிளப்பும். 

மோனம் என்பது ஞான வரம்பு என்றார் ஔவையார். சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லைஎன்பார்கள். 

இடையிடையே மோனமும், தேர்ந்தெடுத்துக் கையாளும் மாணிக்கவார்த்தைகளுமாக,  அமைதியாக நடமாடும் ஒருகாப்பியமாக இளைய உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர்  டாக்டர் எம் எஸ் சுவாமிநாதன் அவர்கள். 

சுயமாய் உழைப்பதில் இவர்காட்டும் உறுதி கண்டு என்னை நானே பலமுறை உரைத்துப் பார்த்து, உருப்படியாய் உழைக்கின்றேனா எனத் தரப் பரிசோனைசெய்து கொண்டிருக்கிறேன்
.


என்னை எங்கு கண்டாலும்  "என்னம்மா எப்படி இருக்கே?"  என்றவாறு  அவர் வரவேற்பு தரும் அந்த நேசம் எனது பாக்கியம்.
        

0 comments:

Post a Comment