Subscribe:

Pages

Friday, April 8, 2011

மரணத்திற்குப் பின்னும் ஜீவிதம் சுஜாதாவின் பக்குவம்.

சுஜாதா: வாராதது போல வந்து .... 

ஜிகினா உலகத்தில் ஆரவாரம் இல்லாமல் வாழ்வது என்பது மிகப்பெரிய கலை. 
அதுவும் நடிப்பவர் பெண்ணா  ஆணா என்பது இதிலே ரொம்பவும் முக்கியம்.
"Show the person, I will tell you the rule" என்பார்கள். படைபலம், பின்னணி பலம், குடும்ப பலம் என்று பலப்பரிட் சை செய்தவாறு  இங்கே காரியங்கள் நடக்கும். இவ்வாறான பலப்பரிட்சை என்பது ஜிகினா உலகத்தில் நித்தியப் பரிட்சையாகும்.  நாளொரு போதும் புடம் போட்டுப் பார்க்கின்ற அக்கினிப் பரிட்சையிது.  இதனைத் தாக்குப் பிடிக்க முடியாமல் வந்தவேகத்தில், திரும்பிப் பார்க்காமல் ஓடியவர்களும், திரும்பி வரமுடியாத இடத்திற்குப் போனவர்களும் எத்தனையோ!

இந்தப் பெண்மணி எப்படி வந்தார் என்று தெரியாதபடி வந்தவர். அரசல் புரசல் வதந்திகளும், புளுகு மூட்டைகளும் தம்மைத் தீண்டி விடாதபடி தற்காத்து, ஊசலாட்டமான பிழைப்பில், உறுதியாய் நின்று குணச்சித்திர வேடங்களில், தனக்கென ஒரு பாணி, தனக்கென ஒரு பாதையென, பாந்தமாய் நடித்து, தனக்கென ஒரு வரலாற்றை வடித்துப் போயிருக்கிறார்.                 

மரணத்திற்குப் பின்னும் ஜீவிதம் சுஜாதாவின் பக்குவம்.  



0 comments:

Post a Comment