Subscribe:

Pages

Saturday, April 9, 2011

சுகி சிவமும் நானும்: அவ்வைமகள்

சுகி சிவமும் நானும்: அவ்வைமகள்  

இது நடந்து எத்தனையோ ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால் அன்று நான் சொன்ன வார்த்தைகள் - அவை  தப்பாமல் அப்படியே நிஜமாகி வந்திருக்கின்றன.

எஸ் ஐ ஈ டி கல்லூரியின் தமிழ் மன்றச்செயலாரக  நான் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் பதவி வகித்திருந்த இனிமையான கல்லூரி நாட்கள். எனது மேஜர் வேதியியல் ஆனால் எனக்கிருந்த தமிழார்வம், முதல்வரால் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டது.
மிசஸ்  க்வ்ஹரின்  ஆர்கானிக் கெமிஸ்ட்ரி வகுப்பு போய்க்கொண்டிருக்கிறது; முதல்வர் அழைக்கிறார் என்று ஆபீஸ் அட்டண்டர் வந்து கூப்பிடுகிறார். வகுப்பு என்னை ஒருமாதிரியாகப் பார்க்க, எனக்குள் படபடப்பு மிக அட்டண்டரின் பின்னால்  சென்று முதல்வர் அறையில் நுழைகிறேன்.

"ஒன்ன  காலேஜ் தமிழ் செக்ரட்ரியா போட்டிருக்கேன். தமிழ் மன்றம் சிறப்பா நடக்கணும் அதுக்கு நீ பொறுப்பு. புதுசா ஏதாவது பண்ணனும். கவனமாப் பண்ணனும். ஒரு துளி கூட இசகு பிசகா எதுவும் நடந்துவிடக்கூடாது. எதுவானாலும் எங்கிட்ட வந்து பேசி, அதுக்குப் பிறகு செய்."   

நான் ஏற்பாடு செய்த முதற்சொற்பொழிவு  சுகி சிவத்தினுடயது. இளமையும் கவர்ச்சியுமாக  அழகு மிகுந்த பெண்கள் நிறைந்த எங்கள் கல்லூரிக்கு இளமையும் அழகுமான, சுகி சிவம் வந்து  பேசியது ஒருவிதக் கிளுகிளுப்புதான். அதுவும் அந்நாளில், கட்டுப்பாட்டுக்குப் பெயர் போனது எங்கள் எஸ் ஐ ஈ டி கல்லூரி. அன்றைய நாளில்  சென்னையில் ஒரு  
பிரம்மாண்டமான உள் அரங்கு என்று பெயர் போன எங்கள் கல்லூரி உள்-அரங்கில், வழிந்த பெண்கள் கூட்டத்திற்கிடையே சுகி சிவம்.  

எனது வரவேற்புரையில், 

"தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும் என்பார்கள் - தந்தை பத்தடி பாய்ந்தால் பிள்ளை நூறடி பாயும் என்று இவரைப்  பார்த்துச் சொல்லத்தோன்றுகிறது."

"தந்தையையும் மிஞ்சும் சொல்வளத்தொடு  "தன்னை வெல்வார் எவரும் இல்லை எனும்படியான சொல்லின் செல்வராய்"  இத்தரணியில் இவர் வலம் வருவார் என்று என்னால் உறுதியாக் கூறமுடியும் ----  சொல் எனும் அற்புதக்கலையில்,  திறம்பட சிறந்து விளங்கும்,
கலை மாமணியான இவரை வரவேற்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்."    
 
நான் அன்று ஹேஷ்யம் கூறியவாரே சுகி சிவம் சொல்லின்செல்வரராகவும்,  
கலை மாமணியாகவும் மாறினார். வருடங்கள்  ஓடினாலும், தனது இளமைத்தோற்றத்தையும்,  குரல் வளத்தையும்,   இவர் பாதுகாத்துவருவது பாராட்டுதற்குரிய விஷயங்கள். பேஷ்! பேஷ்!!

எனக்கும் இவருக்கும் உள்ள ஒற்றுமைகள் மூன்று: நாங்கள் இருவருமே தமிழர்கள்; பேச்சாளர்கள்-எழுத்தாளர்கள்; இருவருக்குமே கிருபானந்தவாரியாரும் குன்றக்குடி அடிகளாரும் உந்து சக்திகளாய்த்த் திகழ்ந்தவர்கள்/திகழ்பவர்கள் .

வேறுபாடு?
*நான் வேதி;  அவர் சட்டாம்பிள்ளை 
ஆய்வக மேடையிலே கலக்குவது என் தொழில்;
மக்கள் மேடையிலே கலக்குவது அவர் தொழில்!! 
அவரைப்போல பேச நம்மாலாகாதப்பா!
உண்மையை ஒழுங்கா ஒப்புத்துக்கொள்ளணும்!  இது சட்டம் பேசும் இடமல்லவா?


அவ்வைமகள் 
*நான் வேதியியல் பேராசிரியர்; அவர் சட்ட வல்லுனர்





 


 

0 comments:

Post a Comment