Subscribe:

Pages

Thursday, April 7, 2011

உங்களுக்குத் தெரியுமா? அரிசிச் சாராயம்

உங்களுக்குத் தெரியுமா? அரிசிச் சாராயம் 

அரிசி என்றால் நமக்கு நினைவுக்கு முதலில் வருவது சோறு. அடுத்து, இட்லி தோசை, ஆப்பம், அப்பம், கொழுக்கட்டை, அதிரசம், சீடை, முறுக்கு எனத் தின் பண்டங்களாக நம் கற்பனை நீளும்.  

அரிசியிலிருந்து போதை தரும் பானங்களும் தயாரிக்கிறார்கள் என்பதை நாம் அவ்வளவாக எண்ண ஓட்டத்தில் கூடக் கலந்திருக்க மாட்டோம்.

மது பானங்கள் திராட்சை ரசத்திலிருந்து மட்டுமே தயாரிக்கப்படுகின்றன என்ற நினைப்பு வேறு நம்மில் பலரின் மனதிலே பதிந்திருக்கிறது.

ஆனால், அரிசியிலிருந்து முக்கிய சாராய வகையறாக்கள் தயாரிக்கிறார்கள்: இதோ பாருங்கள்!   

பசைத்தன்மை நிறைந்த அரிசியை ஊறவைத்து நொதிக்க வைப்பதன்  வாயிலாகத் தயாரிக்கப்படுவது "சேக்"  எனப்படும் மதுபானம். இதனை அரிசிச் சாராயம் என்கிறார்கள். சைனா, ஜப்பான், கொரியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் ஆகிய நாடுகளில் விரும்பி  உட்கொள்ளப்படும்  மதுபானம் "சேக்" தான்.

ஊறுகாய் மற்றும் பிற உணவுப்பதார்த்தங்களைப் பாதுகாப்பதற்காக நாம் பயன்படுத்தும் வினிகர் எனப்படும் "காடி" (அசிடிக் அமிலம்)  அரிசி   நொய்யை ஊறவைத்து நொதிக்க வைப்பதன்  வாயிலாகத தயாரிக்கப்படுவது.

பிரபல மதுபானமான பீர்  அரிசியிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதற்கு  ஊறவைத்த அரிசி  நொய், மற்றும் ஊறவைத்து முளைகட்டிய  பார்லி ஆகியன  மூலப் பொருட்களாகும்.

0 comments:

Post a Comment