Subscribe:

Pages

Saturday, December 3, 2011

போதிமரம் - அவ்வைமகள்

போதிமரம்

உனக்கு எது நடந்தால் என்ன?
உனை எவர் பிரிந்தாலுமென்ன?
உன்மேல் எது விழுந்தால் தான் என்ன?
உன்" இளி" நிலை எவர் கண்டாலுமென்ன?
உன் துயர் எவரும் அறியாரெனினும் என்ன?
உன்னுடல் இறுகி விறைத்த போதும்
உன் ஊன் வற்றி தீர்ந்த போதும
உன் நுனி வேர் கொண்ட சொட்டு ஈரம் 
உன் ஞான நாடியாக   
உன் மௌனம்  தியான நிட்டை  
உன்  அகப்பை அழல் திரட்டி
உ ன்னுள் ஆன்ம வேள்வி மூட்டி 
உ ன் ஆற்றல் உன்னுள் மீட்டு
உ ன் நிலையை மாற்றிக் காட்டும் 
உன் தவவலிமை போற்றி!! போற்றி!!

அவ்வைமகள்


   




0 comments:

Post a Comment