Subscribe:

Pages

Saturday, March 12, 2011

கண்கள் குளமாகுதப்பா!

கண்கள் குளமாகுதப்பா! 

ஒரு நாடு சோதனை மேல்  சோதனையாக  அனுபவித்து வருகின்ற வேதனைகள்  கல்நெஞ்சு படைத்தவரையும் கூடக் கண்ணீர் சிந்த வைக்கிறது, 
காற்று, நீர், நிலம், நெருப்பு, ஆகாயம் எனப் பஞ்சபூதங்களும் இங்குப் பிறழ்வடைய, பிரளயம் நிகழ்ந்து, மக்கள், மாக்கள், இல்லங்கள், ஊர்களென, குவியல் குவியலாய் -- பிராந்தியம் பிராந்தியமாய் அழிவு நிகழ்ந்தேறி  இருக்கிற  - தொடர்கிற அலங்கோலம். என்னடா வாழ்க்கையிது என நம்மைச் சாட்டையிலடிக்கிறது.

இயற்கையின் ஒரு  சிறு சிணுங்கல்தான் இத்தனைக்கும் காரணம். இவ்விழப்பை இந்த சின்ன நாடு எப்படி ஈடுகட்டப் போகிறது? ஈடுகட்டமுடிவதான விஷயமும் அல்லவே! 

இக்கட்டான இத்தருணத்தில் நம்மாலான அனைத்தையும் அவர்களுக்கு நாம் செய்தாக வேண்டுமே! இது நமது கடைமையாயிற்றே!

"நிதி நிறைந்தவர் பொற்குவை தாரீர்! நிதிகுறைந்தவர் காசுகள்  தாரீர்! "   
என்றாரே அண்ணா அதுபோன்று நாம் இன்று விரைந்து உதவி செய்ய வேண்டும். உடுப்புகள், உணவுப்பொருட்கள், மருந்துப்பொருட்கள் தாராளமாய் அங்கு சென்று சேர வேண்டும்.

நம் ஒவ்வொருவரும் இதனைச் செய்திடவேண்டும். புறப்படுங்கள்!! தாமதிக்க நேரம் இல்லை.









0 comments:

Post a Comment